முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். சாதாரணமாக கிராமப்புறங்களில் வேலைகளில் படர்ந்து காணப்படும். இந்த கீரை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இதன் இலை துவர்ப்பு சுவை உடையது. ஒவ்வொரு இலைக்காம்பும் மூன்று பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவுக்கு மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது, ஒவ்வொரு இலைக்காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக எல்லோர் வீட்டு கொள்ளை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். இதை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, கார்போஹைட்ரேட், தாதுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் முடக்கத்தான் கீரை துணை புரியும்.
உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூலம், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களை குணமாக்கலாம். வாய்வு தொல்லை உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்த கீரை நல்லது. மூட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி உடல் வலியை நீக்கலாம். துவரம்பருப்பு பாசிப்பருப்புடன் இந்த கீரையை சேர்த்து கூட்டும் செய்யலாம்.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல், தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும். பின் முடி கொட்டுவது நின்றுவிடும். நரை விழுவதை தடுக்கும். முடி கருகருவென வளரத் தொடங்கும்.

இதனை சாப்பிட தொடங்கும் போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால், பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து, சாப்பிடலாம். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

