தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா. அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க திரிஷாவின் காதல் வாழ்க்கை குறித்து இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது. தெலுங்கு சினிமாவில், பிரபலமாக நடித்து வரும் ராணா டகுபதி காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், அந்த காதலும் பாதியிலே முறிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, ராணா டகுபதி ராமனாயிடு குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர்கள் மிகவும் செல்வாக்கும் மிகுந்த குடும்பம். இவரது சித்தப்பா தான் வெங்கடேஷ் நாகார்ஜுனா குடும்பம் ராணா குடும்பத்தினர் உறவினர்களர் இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள். தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களாம். குறிப்பாக, திருமணம் என்றால் தங்களது சொந்தங்களுக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

குடும்பம் முதலில் சமந்தாவை கூட ஏற்றுக்கொள்ள வில்லையாம். நாகசைத்தான்யா தான் பிடிவாதமாக நின்று சமந்தாவை திருமணம் செய்து கொண்டாராம். குடும்ப பாரம்பரியம் காரணமாக த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் ஏற்பட்டதை ராணா குடும்பத்தினர் சுத்தமாக விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலே முறித்து விட்டார்கள் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

