பொதுவாக பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே, தங்களது குழந்தைகளுக்கு லஞ்சுக்கு என்ன செய்து கொடுப்பது என்பது தான். குழந்தைகளுக்கு பொதுவாக மதிய உணவுக்காக கொடுப்பது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதமாக தான் இருக்கும். இதற்கான காரணம், செய்வதில் உள்ள எளிமையும் அதன் சுவையும் தான்.
ஒரே மாதிரியான சாதத்தை எத்தனை நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து விடுவது பெரியவர்களை விட குழந்தைகளின் உணவு விஷயத்தில் இது சளிப்படைய வைத்து விடும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சுவையான மற்றும் சத்தான சாதகங்களை செய்து கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான பதிவு. அப்படி ஒரு சாதம் தான் பூண்டு மிளகு சாதம். ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். மீண்டும் மீண்டும் இதை செய்ய சொல்லி குழந்தைகள் உங்களை கேட்பார்கள்.

தேவையான பொருட்கள்
- சமைத்த சாதம் ஒரு கப்
- சமையல் எண்ணெய் மூன்று டீஸ்பூன்
- கடுகு ஒரு டீஸ்பூன்
- சோம்பு ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் இரண்டு
- கருவேப்பிலை ஒரு கொத்து
- முந்திரி பருப்பு இரண்டு ஸ்பூன்
- பூண்டு 15 பல்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
- பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
- மஞ்சத்தூள் கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
- பெருங்காயம் ஒரு சிட்டிகை
- மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
Step 1: ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக ஊற வைத்து வேக வைத்து தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாதத்திற்கு எந்த அரிசியை வேணாலும் பயன்படுத்தலாம். ஆனால், பாஸ்மதி அரிசியாக இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
Step 2: சாதத்தை வேக வைத்து தனியாக எடுத்துக் கொடுத்துக் கொள்ளவும். முதலில், ஒரு வட சட்டியை நன்றாக சூடாக்கி அதில், மூன்று டீஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில், ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து அவை வெடிக்க தொடங்கும் வரை பொரிய விடவும். கடுகு பொரிந்த உடன் சோம்பை சேர்க்கவும்.

Step 3: அதன் பின் இரண்டு வரமிளகாயை உடைத்து சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர், ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கலரவும். அதனை தொடர்ந்து, 2 டீஸ்பூன் உடைத்த முந்திரி பருப்பை சேர்த்து அவை பொன்னிறமாக வரும் வரை வதக்கி விடவும். கூடவே 15 பல் பூண்டுகளை சேர்த்து அவற்றை நன்றாக கிளறவும்.
Step 4: பூண்டிலிருந்து நறுமணம் வெளிப்பட்டு, அதை லேசாக பொன்னிறமாகும் வரை வேக விடவும். இதனுடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக கிளறவும். பின் நறுக்கிய ஒரு தக்காளி, வெங்காய கலவையுடன் சேர்த்து அவை நன்கு கலக்கும் படி கிளறவும்.
Step 5: தக்காளி மென்மையாகி வெங்காயத்துடன் முழுமையாக ஒன்றிணையும் வரை ஒவ்வொன்றாக வேகவிடவும். கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வெங்காய கலவையுடன் நன்கு கிளறவும்.
Step 6: கடாயில் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து மசாலா முழுமையாக வேகம் வரை காத்திருக்கவும். கலவை முழுமையாக வெந்த பிறகு அதனுடன் சமைத்த சாதத்தை சேர்க்கவும். சாதத்தின் மேல் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை தூவி நன்றாக கிளறி விடவும்.
Step 7: சாதம் உடையாமல் கலவையுடன் முழுமையாக ஒன்றிணையும் வரை மெதுவாக கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.

