இயக்குநர் ஷங்கர் தற்போது புதிய வரலாற்றுப் பின்னணியிலான ஒரு பிரம்மாண்டத் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற “வேள்பாரி” நாவலை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியுள்ள நிலையில், அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரலாற்றுப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வேள்பாரியாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் நடிப்புத் திறன் மற்றும் கதாபாத்திரத்தில் உயிர் ஊற்றும் திறனை கருத்தில் கொண்டு அவரை தேர்ந்தெடுத்தாக இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“சாவா (Chaava)”, “கேசரி (Kesari)” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விக்கி கௌஷல், இந்த வரலாற்றுப் படத்தில் இணைந்தால் அது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பின் கணவர் தான் விக்கி கௌஷல்.

இந்நிலையில், தனுஷ் மற்றும் விக்கி கௌஷல் இணைந்து நடிக்கிறார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தொடர் தோல்விகளில் உள்ள இயக்குநர் ஷங்கருக்கு இந்த படம் ஹிட் ஆகுமா? வெந்த புண்ணில் ‘வேள்’ பாய்ச்சாமல் இருந்தால் சரிதான்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

