சினிமாவில் தனது தனித்துவமான குரலாலும் வித்தியாசமான நடிப்பு திறமையாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜுன் தாஸ். இவர் கம்பீரமான ஆழமான குரல் மற்றும் வில்லத்தனத்துடன் கூடிய நடிப்பு இவருக்கு தனி அடையாளத்தை சினிமாவில் கொடுத்தது.

சினிமாவில், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்த படம் கைதி. இயக்குனர் லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் அவர் நடித்தார். இந்த கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரம் வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது.

குறிப்பாக, அவரது குரல் மற்றும் பிரசன்டேஷன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். அவரது, குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
2012 ஆம் ஆண்டு பெருமான் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைதி, மாஸ்டர், குட்பேட்அக்லி படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈத்தார்.

பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் அர்ஜுன் தாஸ் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அவர் ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்து விட்டால் அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்ற பதிவு போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் காதல் தோல்வியா என நிறைய கமெண்ட் செய்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


