திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் தவெக தலைவர் விஜய், தற்போது என்டிஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது
இதுகுறித்து தவெக தரப்பிலோ, என்டிஏ தரப்பிலோ யாரும் அதிகாரப்பூர்வமாகவோ, சூட்சமாகவோ எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் இந்த செய்தி எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை.
இந்த நிலையில் என்டிஏவுடன் கூட்டணி வைக்க தவெக மாவட்ட செயலாளர்கள் பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒரு சிலர் வேண்டாம் என கூறுவதாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கையில் திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்..
இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.

NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது என பதிவிட்டுள்ளார்.
இதற்கு தவெக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வரும் நிலையில், ஒரு சிலர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஆதரவு கருத்தையும் சொல்லி வருகின்றனர்.

