கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக சிங்காநல்லூர் அருகே உள்ள நீர் கோணம் பாளையம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக போலீஸ் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தினர்.
அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை அடுத்து அதில் ஆறு பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் பின்னர் அவர்களை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து அவருடைய தம்பி தங்கை இசக்கி திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ் திருச்சியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆறு பேரும் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருவதும் சிங்காநல்லூர் போத்தனூர் ஆலந்துறை அன்னூர் புளியம்பட்டி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி இருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் குறிவைத்து திருடியதும் தெரிய வந்தது.இதை எடுத்து போலீசார் ஆரிரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து எட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் ஒரு கத்தி விலை உயர்ந்த செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது கைதான ஆறு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் தங்கை இசைக்கு பீளமேடு கருமத்தம்பட்டி காவல் நிலையத்திலும் இசக்கி முத்துவுக்கு சரவணம்பட்டி நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்திலும் தீபத்திற்கு திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

