சிலிண்டர் தட்டப்பாட்டால் நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் சமைப்பதே பெறும் பிரச்சினையாக கூட மாறலாம். இந்த நிலையில், அடுப்பும், சிலிண்டரும் தேவைப்படாத சில உணவுப் பொருட்களை முயற்சித்து சிலிண்டர் பிரச்சினையை ஓரளவுக்கு குறைக்கலாம்.

சிலிண்டர் தட்டப்பாட்டு ஏற்பட்டால், இப்படியான சூழ்நிலையில் திடீரென்று வீட்டில் உள்ள சிலிண்டர் காலி ஆகிவிட்டால், கவலையை விடுங்க, அடுப்பில்லாமல் நிறைய ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், இன்று நம் பச்சப்புளி ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். அதோடு, உடலுக்கும் கூட நல்லது. அதுவும், கோடை காலத்தில் இந்த ரசத்தை செய்து சாப்பிடும் பொழுது பல நன்மைகள் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
- ஆறு பல் பூண்டு
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- ஒரு டீஸ்பூன் மிளகு
- ஒரு எலுமிச்சை அளவு புளி
- ரெண்டு வரமிளகாய்
- அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- சுவைக்கேற்ப உப்பு
- இரண்டு பச்சை மிளகாய்
- ஆறு சின்ன வெங்காயம்
- ஒரு தக்காளி
- தேவையான அளவு தண்ணீர்
- ஒரு கொத்து கருவேப்பிலை
- சிறிது கொத்தமல்லி
செய்முறை

Step 1: முதலில் புளியை மற்றும் தக்காளியை நன்றாக நீரில் கரைத்து பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இடிகல்லில் பூண்டு பற்கள், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Step 2: பிறகு ஒரு பாத்திரத்தில் புளி நீரை ஊற்றி அத்துடன் வர மிளகாயை கிள்ளி சேர்க்க வேண்டும். பின்பு அதில், பெருங்காயத்தூள் சுவைக்கு ஏற்ப உப்பு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Step 3: பின் பச்சை மிளகாயை கீறி சேர்த்து அதுடன் சின்ன வெங்காயத்தையும் தட்டி போட்டு சேர்க்க வேண்டும். அதில், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Step 5: அடுத்து தேவையான அளவு நீரை ஊற்றி அதில், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கைகளால் நன்கு ஒரு முறை பிசைந்து விட்டால், சுவையான மற்றும் சத்தான பச்சை புளி ரசம் தயார்.

