நரசிம்மநாயக்கன்பாளையத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை தீப்பந்தங்களுடன் விவசாயிகள் விரட்டியடித்தனர்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூர் பகுதியில், இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று அருகில் இருந்த விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது.
யானை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, தீப்பந்தங்களைக் காட்டியும், சத்தமிட்டும் யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பாதுகாப்பாகத் துரத்தினர். யானையைத் துரத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

