சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம் பெட்ரோல் பங்கில் டீசல் , பெட்ரோல் பேரல் பேரலாக வாங்கி செல்லும் வாகன ஓட்டிகள் – பல மணி நேரமாக அணிவகுத்து காத்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளின் வேதனை.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் பங்கியில் நீண்ட வரிசைகளாக சுமார் 4 . மணி நேரம் 5. நேரமாக பெட்ரோல் டீசல் கேஸ் ஆகியவற்றிற்காக வாகன ஓட்டிகள் அணி திரண்டு காத்துக் கொண்டிருக்கும் அவல நிலை உண்டாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டினால் மாநில அரசும் , மத்திய அரசும் , உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக வீட்டு உபயோக எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் இரண்டு நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வண்டிகளுக்கு பெட்ரொல் நிரப்பி வருகின்றனர்.

