கடந்த சில மாதங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த திருநங்கை வைஷு நாஞ்சில் விஜயன் குறித்து பல குற்றச்சாட்டுகளை தற்போது youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்படி, இருக்கையில், நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி இணைந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, நாஞ்சில் விஜயன் பேசுகையில் நான் அவரை ஏமாற்றியதாகவோ காதலித்ததாகவோ தவறாக நடந்து கொண்டதாகவோ, பணம் வாங்கியதாகவோ, அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றால், அதனை மீடியாவிடம் சொல்ல வேண்டியது தானே? யூடுப் சேனல்களில் என்னை மிகவும் தவறாகவும் தரக்குறைவாகவும் பேசுகிறார்.

எனது பாலினம் குறித்து எல்லாம் பேசுகிறார். இப்படி மிகவும் எமோஷனலாக நாஞ்சில் விஜயின் அதில் தெரிவித்துள்ளார். மேலும், நான் மீடியா சர்க்களில் பலருடன் அன்பாக பழக கூடியவன். அதுபோலத்தான் அவருடன் பழகினேன். அவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

இதுபோல செய்வது மற்ற திருநங்கைகளுக்கும் கெட்ட பெயர் தான் வருகிறது. திடீரென வைஷு ஏதாவது செய்து கொண்டால் எனது பாதுகாப்பிற்கு என்ன இருக்கிறது. அதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதேபோல் அவரது மனைவி பேசவே தினமும் இரவு நேரத்தில் அதாவது நள்ளிரவில் குடித்துவிட்டு போன் செய்து அதுவும் நன்றாக குடித்துவிட்டு வைஷு மிரட்டுகிறார்.

மேலும், எனது உடல்நிலை குறித்து youtube சேனல்களில் விவாதிக்க அவர் யார்? அவருக்கு யார் உரிமையை கொடுத்தது. எனது குழந்தையை எதற்காக இழுக்கிறார். குழந்தை மீது சத்தியம் செய் என்றெல்லாம் கேட்கிறார் என்று நாஞ்சில் விஜயன் மனைவியும் அந்த பேட்டியில் கண்ணீருடன் பேசி உள்ளார்.

