சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு.
நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு.

படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த படம் வெளியானது. முன்னதாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை உலக அளவில் இந்த படம் கடந்துள்ளது என சிவகார்த்திகேயன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராதிகா பெரிய நடிகர்களை அட்டாக் செய்து பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, என்னிடம் சிலர் என்னங்க உங்க படம் 50 கோடியோ அறுவது கோடியோ தான் வசூலித்துள்ளது. அதுக்கு எதுக்கு சக்ஸஸ்மீட் என்று கேட்கிறார்கள். எங்கள் படத்தின் டிக்கெட் விலை ரூபாய் 150 இந்த 150 ரூபாய் டிக்கெட் விலையில் எங்கள் படம் இந்த அளவுக்கு வசூலித்துள்ளது.

பெரிய கதாநாயகர்களின் படங்கள் வரும்பொழுது அதன் டிக்கெட் விலை 1500 மற்றும் 2000 என விலை உயர்த்தி இந்த வெற்றியை நாங்கள் அடையவில்லை. பெண்களுக்கான படத்தை பெண்கள் சிரமம் இல்லாமல் வந்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 150 ரூபாய்க்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படியான வெற்றியை நாங்கள் காட்டியுள்ளோம். அதுதான் உண்மையான வெற்றி என்று அந்த நிகழ்ச்சியில் ராதிகா பேசியுள்ளார்.

