விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம்.

ஜேசன் சஞ்சயின் செயல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இப்போது பிஸியாக உள்ளார். அந்த படத்தின் போஸ்டரில், இயக்குனர் என்ற இடத்தில் ஜேசன் சஞ்சய் S என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

S என்பது சங்கீதாவை கூறுவதாகும். இனிஷியலுக்கு கூட விஜய் வேண்டாம், தன் தந்தை இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டாரா என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தந்தையின் முதல் எழுத்தான J அல்லது V யை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது. இது குறித்து பலரும் உண்மையில் ஜேசன் சஞ்சய் பாவம் தான் என்றும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் ஈரோடு சென்று அங்கு ஒரு நிறுவன ஊழியர்களுடன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


