நடிகரும், தவெக தலைவருமான விஜய் சினிமாவை விட்டு அரசியலில் நுழைந்துள்ளார். வரும் தேர்தலில் அவரது கட்சி தற்போதை நிலவரப்படி தன்னிச்சையாக போட்டி போட உள்ளது.
இதனிடையே அவரது அரசியல் வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையிலும் புயலை கிளப்பும் விதமாக மாறியுள்ளது விவாகரத்து வழக்கு. விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான், சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகிறது.
நடிகையுடன் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக சங்கீதா குற்றம்சாட்டியதால், இந்த விவகாரம் மேலும் கவனத்தை ஈர்த்தது. பலரும் விஜய், திரிஷாவை திட்டி தீர்த்து வந்தாலும், சங்கீதா குறித்து நெட்டிசன்களும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் கீழ்த்தரமாக விமர்சித்தனர்.
ஒரு பக்கம் விஜய் மீது அடுக்காக புகார் வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் விஜய், தனது அரசியல் பணியை செய்து வருகின்றார். அது மட்டுமல்லாமல், திரிஷாவுடன் அவர் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றது பேசுபொருளானது.

இதனால் சங்கீதா சொன்னது உண்மையாகிவிட்டது என பிரபலங்களே விஜய் மீது விமர்சனம் செய்து வருகின்றனர். சமுத்திரக்கனி, பார்த்திபன் போன்றவர்களும் விமர்சித்தனர்.
இதில் பார்த்திபன் பேசியது வைரலான நிலையில், திரிஷா பதிலடி கொடுத்து உடன் அவர் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் நடந்தது. இந்த நிலையில்தான், விவாகரத்து பண்ணிட்டு ஊரு சுத்த வேண்டியதுதானே என நடிகை காஜல் பசுபதி விமர்சித்துள்ளார்.
நடிகையும், சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, திரிஷாவையும், சங்கீதாவையும் எல்லாரும் திட்டறீங்க. தப்பு பண்ண ஆம்பளைய விட்டுட்டீங்களே.. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னு சொல்ற நீங்க பொண்டாட்டிக்கு பாதுகாப்பு குடுக்கணும்ல.

ரெண்டு பேரும் கல்யாணத்துல போய் என்ன சொல்லி வாழ்த்தியிருப்பீங்க? பொண்டாடிய கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துக்கோணு சொல்லியிருப்பீங்களா?
விவாகரத்து பண்ணிட்டு ஊர சுத்துங்க என்ன எழவு வேண்டுமானாலும் பண்ணுங்க.. யாரு கேட்கப் போறாங்க? நீங்க பெரிய ஆள் ஆனதும் கழட்டி விடுவீங்களா? அவங்க ஒண்ணும் பிச்சைக்காரி இல்ல,, விஜய்யை கல்யாணம் பண்ணும் போது பணக்காரியா இருந்தாங்க.. காச பாத்து வரல உங்கள பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணாங்க என விளாசியுள்ளார்.

