வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஃபுல் ஃபார்ம் இல் சென்று கொண்டிருக்கிறார். மேலும் வடிவேலு நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் உச்ச காமெடியனாக இருந்தவர்.
இந்நிலையில், வடிவேலுவுடன் நடித்த சோனா பேட்டி ஒன்றில் கூறிய விஷயங்கள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குசேலன் படத்திற்கு பின்னர் தனக்கு நடிக்க ஏராளமான படங்கள் வந்தும் வேண்டாம் என கூறி மறுத்துவிட்டேன் என நடிகை சோனா தற்போது, பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

காரணம் குசேலன் படத்திற்கு பின் 16 படம் வடிவேலுவுடன் நடிக்க கேட்டார்கள். ஆளை விடுங்கடா சாமி என கூறி ஒரு படம் கூட ஒப்புக்கொள்ளவில்லை. என்னால், அவரை சமாளிக்க முடியவில்லை. அந்த விஷயங்களை வெளிப்படையாக கூற விரும்பவில்லை. எனக்கு சுயமரியாதை தான் மிகவும் அவசியம் என்று சோனா பேட்டியில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

