நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக t20 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து மோதிய அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த போட்டியில் நடிகரும், இயக்குனருமான RJ பாலாஜி கமெண்டரி செய்தார். வழக்கம் போல் படபடவென்று பேசிய அவர் கருப்பு படம் பற்றியும் பேசினார். அவர் கமெண்ட்ரி பேசுகையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ஐபிஎல் தொடரில் ரிலீஸ் செய்து விட்டது.

ஆனால், நான் எடுத்த கருப்பு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. அதாவது, ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற RJ பாலாஜி ஏப்ரல் மாதத்தில் கருப்பு ரிலீஸ் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். அப்படி இருக்கும் சூழலில் எதற்காக இப்போது புலம்ப வேண்டும் ஒரு வேலை ஏப்ரல் ரிலீசிலிருந்து கருப்பு படம் தள்ளி போகுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

