கரூர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி புரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ ஜனவரி 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயிடம் முதல் சுற்று விசாரணை டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நடத்தியது. அதில், அன்றைய தினம் விஜய் 6 மணி நேரங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அன்றைய தினம் விஜயுடன் நடத்தப்பட்ட விசாரணையில், ஆறு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி இரண்டாவது சுற்று விசாரணை சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்டது. இதற்கு மேல் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

ஆனால், கரூர் வழக்கில் நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபி சமன் அனுப்பி உள்ளது. முன்னதாக, நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க இருந்த நிலையில், திடீர் சமன் அனுப்பப்பட்டுள்ளதால், அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

