நடிகர் விஜய் விவகாத்து வழக்கு மற்றும் த்ரிஷா பற்றிய விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே அதிகமாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில், நேற்று த்ரிஷா குறித்து பார்த்திபன் தெரிவித்திருந்த கருத்துக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், பார்த்திபன் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது, அவரிடம் த்ரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து பேசும் படி கூறி இருக்கிறார்கள். அதற்கு, இவரோ விஜய் த்ரிஷாவின் ஜோடியான வருகையை மனதில் வைத்துக்கொண்டு குந்தவையை வீட்டில் குந்த வையுங்கள்.

அதாவது, இந்த குந்தவையை வெளியே வராமல் கொஞ்ச நாளைக்கு வீட்டுக்குள்ளேயே குந்த வைப்பது நல்லது. நிறைய பிரச்சனைகள் உண்டாக்காமல் இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர்த்து கவிதை சொல்லாமல் இருப்பது பெட்டர் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு த்ரிஷா அவரது கண்டனத்தை நேற்று அவரது எக்ஸ்தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
“நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடந்ததை என்னிடம் சொன்னார்கள். என் பெயர் மற்றும் போட்டோவை கடைசி நிமிடத்தில் சேர்க்கும்படி அவரது அசிஸ்டன்ட் மூலமாக சொல்லி சேர்க்க வைத்திருக்கிறார்.
மைக்கை பிடித்து இப்படி கமெண்ட் செய்தால், அது புத்திசாலித்தனம் அல்லது நகைச்சுவை ஆகாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக சொல்கிறது. இப்படி, அறிவில்லாமல் பேசியது அந்த நபரை பற்றி தான் காட்டுகிறது. என்னைப் பற்றி அல்ல”
என த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன். அவரது எக்ஸ் பதிவில்,
“எது நடந்ததோ
அது தவறாகவே
நடந்துள்ளது இதில்.
வருந்துவதைத் தவிர
வேறு வழியில்லை !”
குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
எது நடந்ததோ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 8, 2026
அது தவறாகவே
நடந்துள்ளது இதில்.
வருந்துவதைத் தவிர
வேறு வழியில்லை !https://t.co/pOTDcx1QR8
அதில் அவர் சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நிறைவேற்றப்படுகின்றன. அந்த நிகழ்ச்சியின், ரேபிடோ ஃபயர் போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னபோது த்ரிஷாவின் புகைப்படத்தை காண்பித்தார்கள்.
என்ன சொல்லலாம் என யோசிக்கையில் “குந்தவையை குந்தவை” என குரல் எழுப்பினார்கள். உடனே வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே அவ்வாறு பேசினேன். வீட்டில் குந்தவைக்கவும், பிரச்சனை வராமல் இருக்க எனக் கூற கைத்தட்டியது பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.

இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே குந்தவை என்பதை தவிர்த்திருக்கலாம் என கூறினார். உடனே, நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம், இதை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.
ஆனால், யாரோ எடுத்த மொபைல் வீடியோ வெளியாகிவிட்டது. சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனது வருத்தத்தையும் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். பிரச்சனைகள் பெரிதாவதை நான் என்றுமே விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்கு சென்று பேசுவதில் பெண் சுதந்திரம் பற்றிய பேசுகிறேன் ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே, பெண்ணே இப்ப பிரபஞ்சத்தின் ஆகப்பெறும் ஆக்க சக்தி என்று தெரிவித்துள்ளார்.

