இந்தக் கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடலுக்கு ஆரோக்கியம்தராத உணவுகளை அதிகமாக விரும்பி உண்கின்றனர். இது ஒரு பெரிய சாதாரண பழக்கமாக இருந்து, பின்னர் தினசரி அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ஒரு போதை பழக்கமாகவே மாறிவிடுகிறது.
இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக விட்டு விட்டால் நாளை உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முன்னதாக, சமீபத்திய ஆய்வுகளின் படி சிப்ஸ் மற்றும் குளிர்பான உணவுப் பொருட்களின் மீதான ஈர்ப்பு புகையிலை போன்ற போதை பொருட்களை ஒத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய தலைமுறை சிப்ஸ் பிஸ்கட் குளிர்பானங்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையும் ஆர்வமாக சாப்பிடுகிறார்கள். இதில், அதிக அளவில் மக்களை அடிமையாக்கும் திறன் இருக்கிறது என்று ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது.

இவை மனித மூளையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அந்த ருசியை மிகவும் விரும்பச் செய்து மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிடும் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. இந்த பழக்கம் மது சிகரெட் மற்றும் ஒரு சில போதைகளுக்கு அடிமையாகவும், மனநிலைக்கு இணையானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பதப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் அவற்றின் ஈர்ப்பு மிக்க சுவை மற்றும் வாசனை காரணமாக அனைவரையும் அடிக்கடி சாப்பிட வைக்கிறது. அவற்றின் சுவை மக்களை அதிகப்படியாக விரும்பும் வகையில் தயாரிக்கப்படுகிறது. என்னதான் வயிறு முழுக்க உணவுப் பொருட்களை நிரம்பி இருந்தாலும், இந்த உணவுகள் பற்றிய ஞாபகம் வந்தவுடன் மேலும், மேலும் உண்ண வேண்டும் என்ற ஆர்வம் ஆசையும் அவர்களுக்கு அதிகரிக்கிறது.
இந்த ஆர்வம் ஒரு வகையான போதைப் பழக்கமாக மாறிவிடுகிறது. இந்த போக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது என்று பல்வேறு நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளின்படி, குளிர்பானம் மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளும்பொழுது ‘டோபமைன்’ வெளியிடப்படுகின்றன. ‘டோபமைன்’ மகிழ்ச்சி மற்றும் அதிகப்படியான ஆர்வத்தை ஒரு பொருளின் மீது தூண்டும். இந்த செயல்பாடு, புகையிலை மற்றும் நிகோடின் நுகர்வின் போதும் நடைபெறுகிறது.
இந்த அனுபவத்தை மூளை மீண்டும் மீண்டும் என்று விரும்புகிறது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலுக்கு அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டு இருப்பதால், இதில் அதிக அளவு கொழுப்பு கார்போஹைட்ரேட், உப்பு, சக்கரை ஆகியவை கலந்து இருக்கின்றன.

இவற்றில் உள்ள சுவை, அமைப்பு, நறுமணம், கண்கவர் கவர்ச்சி பேக்கிங் ஆகியவை அனைவரையும் அடிமையாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் தினசரி வழக்கமாக மாறி கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
உணவுகளை அதிக அளவில் உண்ணும் போது, உடலில் செரிமான மண்டலம், கணையம், கல்லீரல் வரை அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கிறது. இதில், உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையைக் கொண்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் இவற்றில், ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவும், கெட்ட கொழுப்பு மற்றும் சோடியம் அதிக அளவில் இருப்பதால், இது ஆரோக்கியத்தில் நீண்ட காலம் மோசமான தாக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

