நடிகை திரிஷாவுடன் நேற்று முன்தினம் திருமணத்திற்கு விஜய் ஜோடியாக வந்திருந்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி படு வைரலானது. முன்னதாக, கரூர் விவகாரம், ஜனநாயகன் பிரச்சனை என அனைத்திலும் விஜய்க்கு முழு ஆதரவை கொடுத்தவர்கள் அவரது தொண்டர்களும் ரசிகர்களும்.

ஆனால், இந்த விவகாரத்தில் தங்களது சப்போட்டை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்ன செய்தாலும், தன்னுடைய ரசிகர்கள் தன்னுடன் இருப்பார்கள் என்ற மமதையில் விஜய் இப்படி செய்திருக்கிறார் என அனைவரிடமும் ஒரு எண்ணம் உருவாகிவிட்டது.
முன்னதாக, விவாகரத்து விஷயம் வெடித்த போது இது அவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படாது என்று திடமாக நம்பினார்கள் தவெககாவினர். ஆனால், திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தது கண்டிப்பாக பேக் ஃபயர் ஆகும் என்பதை தற்போது உணர்ந்து இருப்பார்கள்.

அதை சரி செய்யும் பொறுப்பில் இருக்கும் தலைவரே இப்படி அலட்சியமாக இருக்கும் நிலையில், நாம என்ன பண்றது என்று தாவிகாவினர் புலம்பி வருகிறார்கள். கண்டிப்பாக தேர்தலில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், திரிஷாவுடன் விஜய் வந்தது குறித்து சமுத்திரகனி செம டென்ஷன் ஆகியிருக்கிறார். அதாவது, டெக்ஸ்லா பட பூஜையில் கலந்துகொண்டுவிட்டு இயக்குநர் பாலா மற்றும் ஆர்.வி .உதயகுமாரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, “இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயம் நடக்கிறது, நீ அவங்களை வெளியே கூட்டிட்டு போறே, நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதானே? யாரை நீ பழிவாங்க, எதற்காக இந்த போஸ் அனைத்தும் நன்றாக வந்து கொண்டிருந்தது. இனிமேல் நம்மால் முடியாது என கட்சிக்காரனே சொல்கிறான்” என்று டென்ஷனுடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். அதை இயக்குனர் பாலா சைலன்டாக கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது, சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. விஜய் குறித்து திரைத்துறையில் இருப்பவர்களே இப்படி கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்களே என மேற்கொண்டு ரசிகர்களும் தொண்டர்களும் சோகம் அடைந்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்தபோது மனதார பாராட்டி வரவேற்றவர்களில் சமுத்திரகனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

