நடிகரும், தவெக தலைவருமான விஜய் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. விஜய்யின் அரசியல் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தினமும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்ததில் இருந்து எந்த கட்சியும் விஜய் கட்சியுடன் இன்று வரை கூட்டணி போட வரவில்லை. விஜய் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களில் ஏதாவது அசம்பாவதிங்களும் அரங்கேறி வருவதால், அவரை பேசாத மீடியாக்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
போதாக் குறைக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீசி வருகிறது. விவாகரத்து கேட்ட மனைவி சங்கீதா, ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளதால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என ஓபனாக பேசியுள்ளார். மேலும் எனக்கு நெருக்கடி கொடுத்தால், அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் வெளியிட நேரிடும் என அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இது தமிழக மீடியாக்களுக்கு இரையாக மாறியது. விஜய் அரசியலுக்கு ஆகமாட்டார் என பல மீடியாக்கள் பேசி வரும் சூழலில், தனிப்பட்ட வாழ்க்கையும் பேசு பொருளானது.
தவெக தொண்டர்கள், ரசிகர்கள் விஜய் மனைவி குறித்து சமூக ஊடகங்களில் ஆபாசமாக, கீர்த்தரமாக பதிவு செய்து வருவதாகவும், விஜய் வாய் திறந்து பேச வேண்டும் என தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய், நேற்று நடிகை திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் ஜோடியாக பங்கேற்றது மேலும் ஊடகங்களுக்கு தீனியாக அமைந்தது.

ஆனால் இது குறித்து விஜய், திரிஷா தரப்பு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர்கள் வேலையை செய்து வருகின்றனர். இது குறித்து சோஷியல் மீடியாக்களில் விமர்சனங்கள் பறந்து வரும் நிலையில், நடிகை மாளவிகா மோகனும் தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
— Malavika Mohanan (@MalavikaM_Fans) March 6, 2026
பேட்ட படத்தில் நடித்த போது, திரிஷாவுடன் பணியாற்றிய போட்டோவை பதிவு செய்துள்ளார் மாளவிகா மோகன். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த பலரும், இருக்கற பிரச்சனையில நீங்க வேற என பதிவிட்டு வருகின்றனர். இந்த நேரத்துல இந்த போட்டோவை போட்டிருக்காங்க.. ஏதோ சொல்ல வராங்க என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

