சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், 4 மருமகள்களின் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க வந்த 4 பெண்களின் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் விடாமல் இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.
முதல் பாகம் முடிவுற்று, எதிர்நீச்சல் தொடர்கிறது என 2வது பாகமும் சூடுபிடித்து போனது. ஆனால் என்னதான் ஆதி குணசேகரனுக்கு எதிராக போராடினாலும் அவரே அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவது இல்லத்தரசிகளே அலுத்து போகும் அளவுக்கு இருந்தது.
இதனிடையே தான், மீண்டும் ஆதிகுணசேகரனுக்கு ஜெயில், ஜனனி கர்ப்பம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்த நிலையில் தனது சொத்தை எல்லாம், தனது தம்பி கதிர் மற்றும் ஞானத்திற்கு எழுதி வைத்துவிடுகிறார் ஆதி குணசேகரன்.
சொத்து மேல் ஆசையுள்ள ஆதி குணசேகரன் எப்படி சொத்தை தனது தம்பிகளுக்கு எழுதி தந்துள்ளார் என யோசிக்கும் ஜனனி, இதில் என்ன ரகசியம் இருக்கிறது என கண்டுபிடித்து வருகிறார்.

இப்படி இந்த தொடர் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஜனனியாக நடித்து வரும் பார்வதி, அண்மையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்
அதில், சீரியலில் புது புது டுவிஸ்ட் வரப்போகுது என்றும், பிரபலங்கள் பலர் நடிக்க உள்ளனர், கதைக்களம் மாறப்போக உள்ளதாகவும், இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது, நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார்.

