உங்க ஸ்கின்னுக்கு காஸ்ட்லியான ப்ராடக்ட் யூஸ் பண்ணி டையட் ஆகிட்டீங்களா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை வைத்து உங்க முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்
தேவையான பொருட்கள்
- 2 டீஸ்பூன் பால்
- 3 உருளைக்கிழங்கு
- ஒரு டீஸ்பூன் ஓட்ஸ்
- ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு
எப்படி பயன்படுத்தலாம்

உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கொள்ளவும். ஓட்ஸை
பொடி செய்து கொள்ளவும். அடுத்து, அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளும். 30 நிமிடங்கள் இதனை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.
முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ உங்கள் சரும அழகு கூடும்.
முன்னதாக, உருளைக்கிழங்கு உங்கள் சருமத்தில் உள்ள சேதத்தை போக்கி உங்கள் சருமத்தை சரி செய்கிறது. எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசை போக்கி அடைப்பை திறந்து சருமத்தை பிரகாசிக்க செய்கிறது.
தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. எலுமிச்சை சாறு நேரடியாக அப்படியே தடவும் போது எரிச்சல் ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு உங்கள் வயது முதிர்வுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இதனால், சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

