ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

“விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணத்தில் அணிந்திருந்த உடை மற்றும் தங்க நகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களில், சினிமா நட்சத்திரங்கள், டாப் நடிகைகள், ஹீரோக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் கூடக்கூடாது, எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என போலீசார் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






