நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ இதற்கு பிறகு பெரிதாக எந்த அப்டேட்டுகளும் வரவில்லை.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு அஜித் கார் ரேஸ்ஸில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கு இருந்தது.

அப்படி இருக்கும்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64வது படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், படத்தின் பணிகள் தொடங்கவே இல்லை காரணம் அஜித் சம்பள விஷயத்தில் இறங்கி வரவில்லை என்று கூறப்பட்ட வந்தது.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, அஜித்தின் கார் ரேஸ் ஆனது இயக்குனர் எல் விஜயால் ஆவணப்படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான் இயக்குனர் விஜய்க்கு இதை ஆவணப்படமாக உருவாக்கி வெளியிடுவதை விட ஒரு திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

இதுகுறித்து அவர் அஜித்திடம் கூறியதும் அஜித் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று இருக்கிறாராம். மேலும், இப்படி இருக்கும் போது ஆவண படத்தை படமாக வெளியிட அஜித் தரப்பில் எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இது மட்டும் இல்லாமல் படத்தை ‘மே ஒன்றாம் தேதி’ அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாகவும், பின்னணி இசை பணிகளில் ஜிவி பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கார் ரேசிங்கை ஆவணப்படுத்தி படமாக உருவாக்கி திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்பதால் கார் ரேஸை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலை சுலபமாக மாறுகிறது என்பதாலும், அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறதாம்.

மேலும், தியேட்டர் ஓனர்களிடம் பேசி ‘நெட் பிலிப்ஸ்’ தரப்பில் பேசியும் அடுத்த கட்ட நகர்விற்கு அஜித் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்களும் அஜித் கார் ரேஸில் செத்துப் பிழைத்தது எல்லாம் கொஞ்சம் கூட வீண் போகல என்று மார்தட்டி வருகின்றனர்.

