நடிகை ராதிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக பொருந்துவார். பொருத்தத்தை விட அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார்.
பாரதிராஜாவின் மெட்டீரியல் என்றால் சும்மா இல்லை, திறமைசாலியான நடிகர்களாகத்தான் இருப்பர் என்பதற்கு ராதிகா சிறந்த உதாரணம்.
கிழக்கே போகும் ரயில் முதல் தற்போது தாய் கிழவி வரை அவர் காட்டும் நடிப்பு வித்தியாசம், அவர் தந்தை எம்ஆர் ராதாவையே மிஞ்சும் அளவுக் உள்ளது.
தாய் கிழவி படத்தில் மிரட்டலான லுக்கும், மாஸான பேச்சும் பெண் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதனிடையே தாய் கிழவி சூப்பர் ஹிட் ஆனதும் தொடர்ந்து ஊடகங்கள் அவரிடம் பல பேட்டிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், யூடியூபில் உள்ள ஒரு சேனலுக்கு பேட்டியளித்த ராதிகா, நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் நானும் நடித்து வருகிறேன்.
அதில் மமிதா பைஜூவை பார்த்தேன், அனைத்தையும் அசால்ட்டாக செய்து வருகிறார். அவர் ஒரு அட்டகாசமான நடிகை.
திரிஷா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பை எனக்கு பிடிக்கும், நயன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருடை ஆளுமை எனக்கு பிடிக்கும்.
வெளியே நயன்தாரா பார்ப்பதற்கு சிரிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அவருக்குள் இருக்கும் ஒரு அழுத்தம் தான், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
சில சமயங்களில் நயன்தாராவுக்குள் ராதிகாவை பார்த்துள்ளேன். சினிமாவில் அவர் நிலைத்து நிற்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐயா படத்தில் இருந்து நடித்து வரும் நயன்தாரா பல சர்ச்கைளுக்கு பேர் போனாலும், விமர்சனங்களை தூக்கி எறிந்து சிகரத்தை தொட்டு வருகிறார்.

2 முறை காதல் தோல்வியுற்றாலும், விக்னேஷ் சிவனை காதலித்து புரிந்து திருமணம் செய்து, 2 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளார். அதுவும் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு விசாரணை செய்யும் அளவுக்கு சென்று, பின்னர் அதில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தது.
தொடர்ந்து டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் நடித்திருந்த தெலுங்கு படமான மன சங்கர வர பிரசாத் படம் சூப்பர் ஹிட் அடித்து, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

