விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து கேட்டிருக்கும் சங்கீதா அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணங்களும் குற்றச்சாட்டுகளும் பெரிய இடியைத்தான் இறக்கியது. மேலும், சஙகீதா மீது தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதலுக்கு விஜய் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
அட, கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. சங்கீதாவை யாரும் அவதூறாக பேச வேண்டாம் என ஒரு வர்த்தை கூட சமூக வலைதளங்களில் கூற முடியாதா என பலரும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்று தஞ்சாவூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது பேசிய அவர், நான் கடந்த கூட்டத்தில் பேசியதை வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என சொன்னார்கள். நான் என்ன பேசினாலும் திரித்து சொல்கிறார்கள்.
பல தில்லு முல்லு வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். சென்னையில், டெல்லி டெல்லி என கூறுகிறார்கள். டெல்லிக்கு வெள்ளைக்குடி பிடிப்பது யார் என்று எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டைப் பிழைக்க வைப்பதே ஸ்டாலின்தான் என சொல்கிறார்கள். இதெல்லாம் ஒர்க் ஓட்டே ஆகாது பாஸ். ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்கிறார்கள்.
கிரிக்கெட்டில் கூட தமிழ் அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் தான் இருக்கிறது. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு எனக்கும் என் மக்களுக்கும் நடுவே வேறு யாராலும் உள்ளே நுழைய முடியாது. இது இயற்கையாகவே அமைந்த உறவு.
தமிழ்நாடு மக்களும் அதை உணர்ந்து இருக்கிறார்கள் என்பது தேர்தலில் நிரூபிக்கப்படும். கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பழி போடுகிறார்கள். ஜனநாயகன் விஷயத்தில் முதலமைச்சர் பூசி மெழுகி குரல் கொடுத்தார்கள் இருந்தாலும் எனது நன்றி என்றார் விஜய்.
முன்னதாக சங்கீதா பற்றி விஜய் மறைமுகமாக பேசுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

