அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது துபாயில் இருக்கிறார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு நடுவே நடக்கும் போரினால் துபாயிலிருந்து இன்னும் அஜித் சென்னைக்கு திரும்பவில்லை. ஆனால், அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அவரது தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இப்படி இருக்கையில், நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்களும் கடந்த ஓராண்டுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அது எப்போது தொடங்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இப்படி இருக்கையில், அஜித்தின் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையும் குறைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

