தாய் கிழவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் அதிரிபுதிரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கிய திரைப்படம் தாய் கிழவி. ட்ரெய்லரே மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
படமும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய படங்கள் இல்லாத நிலையில் தாய் கிழவி 50 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என கூறப்படுகிறது.

தாய் கிழவி படத்துக்கு போட்டியாக வெளியான விஜய்யின் ரீ ரிலீஸான் தெறி படமும், சரத்குமாரி ஆழி திரைப்படமும், ஆரியின் FOURTH FLOOR படங்கள் செம அடி வாங்கியுள்ளன.

தாய் கிழவி படம் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியளள்தாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெறும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், ரூ.50 கோடி வசூலை தாண்டும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக படம் எடுக்கப்பட்டுள்ளதால், குடும்பம் குடும்பம்க தியேட்டருக்கு படம் பார்க்க வருகின்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், அந்த தினம் வருவதற்கு முன்பே வசூலில் மாஸ் காட்டியுள்ளது.
இதனால்தான் இயக்குநர் சிவக்குமார் முருகேசனை தனது அடுத்த படத்திற்கு புக் செய்துள்ளார் எஸ்கே. சேயோன் திரைப்படமும் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என இப்பவே ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

