பொதுவாக முகத்தின் அழகுக்கு மெருகூட்டுவதும் கவர்ச்சியாக காட்டுவதும் புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகை கொடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், புருவங்களில் உள்ள முடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவது நல்லது. அதோடு, சம அளவு பாதம் எண்ணெயும், ஆளி எண்ணெயையும் கலந்து சிறு துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்துவர புருவங்களில் மாற்றத்தை உணரலாம்.

மேலும், புருவங்களில் விளக்கெண்ணெய் தடவுவதற்கு முன்பு இரண்டு விரல்களால் புருவங்களை மெதுவாக கிள்ளிவிட வேண்டும். எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு முடி அடர்த்தியாகும். கருமையாகவும் வளர்வதற்கு வேலை செய்கின்றது.
தினமும் குடிப்பதற்கு முன்பு புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்து விட்டு ஊற வைத்த பிறகு குளிக்கலாம். இது புருவத்தை மேலும், மெருகேற்றும்.

புருவங்களில் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். புருவங்களில் வெள்ளை முடி இருந்தால் ஐப்ரோ பென்சில் பயன்படுத்துவதை தவிர்த்து மஸ்காராவை உபயோகிப்பது அழகாக காட்டும்.
புருவங்களின் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி, லாவண்டர், மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தது. தினமும் படுக்கைக்கு செல்லும்போது புருவங்களுக்கு கொஞ்சம் வாசலின் அல்லது விளக்கெண்ணெய் தடவுவது முடி அடர்த்தியாக வளரும்.

புருவமுடி உதிராமல் இருக்க நாள்தோறும் கொஞ்சம் வெண்ணெய் சாப்பிட வேண்டும் அதோடு, இரவில் பசும்பால் ஒரு டம்ளரும் சாப்பிட வேண்டும். உடனே புருவம் முடி உதிர்வது நிற்பதோடு புதிதான முடிகளும் வளர்ச்சி அடையும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

