தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த மனு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், அதற்காக விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 27 ஆண்டுகள் நீண்ட மண வாழ்க்கைக்கு பிறகு இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், 2026 தேர்தலை தனது முதன்மை இலக்காக கொண்டு விஜய் செயல் பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பார். ஏற்கனவே, திட்டமிட்டு இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயால் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஒன்று, இரண்டு மாவட்டங்களில் மட்டுமே விஜய் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்த நிலையில், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வழக்கு விசாரணை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில், அப்போதுதான் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிரச்சாரத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டே விவாகரத்து வழக்கையும் நடத்த வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இருக்கிறார்.

இதனால், மனரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விஜய் பெரும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று கருத்துக்களும் எழுந்து வருகிறது. ரசிகர்களோ எலக்சன் டைம்ல இதெல்லாம் தேவையா? என்பது போல தங்களுடைய கருத்துக்களையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு மனுஷனுக்கு எவ்வளவு தாண்டா பிரச்சனைகளை கொடுப்பீங்க, நாங்க இருக்கோம் எங்க அண்ணனுக்கு என்று பலரும் விஜய்க்கு ஆதரவாக இந்த விஷயத்தில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

