விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்தது குறித்து அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து எழுந்த செய்தியாளர் கேள்விக்கு, அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் விஜய்யின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விஷயம் முற்றிலும் விஜய், அவரது மனைவி மற்றும் நீதிமன்றம் ஆகியோருக்குள் உள்ள தனிப்பட்ட பிரச்சினை எனவும், இதுபற்றி அரசியல் நோக்கில் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலுக்குள் நுழையும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அதிகமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதையும், அதனை உணர்ந்தே விஜய் அரசியலுக்கு வந்திருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழ்நிலையை அவர் சமாளித்து முன்னேற வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து நேர்மறை அல்லது எதிர்மறை நிலைப்பாடு எதையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரத்தை அரசியலாக்கவோ அல்லது விமர்சனத்திற்குரியதாக மாற்றவோ தாம் தயாரில்லை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்தச் சூழ்நிலையைத் தாண்டியும் மக்கள் விஜயை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

