தமிழ்நாடு முழுவதும் சென்சேஷனல் செய்தியாக மாறியுள்ளது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா.
வழக்கு தொடுத்தது முதல் சோஷியல் மீடியா முழுவதும் விஜய் மற்றும் சங்கீதா குறித்தும் நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக சங்கீதா சொன்ன அந்த நடிகை இவர்தான் என நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த சங்கீதா சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா குறிப்பிட்டுள்ளதாவது, 2021ஆம் ஆண்டு முதல் மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விஜய் தன்னுடைய திருமண, சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம்.
எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாட்டுக்கு செல்கிறார். பொது நிகழ்ச்சியில் நடிகையுடன் பங்கேற்கிறார். நடிகையோ விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்த சென்ற புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது எனக்கு பெருத்த அவமானத் தருகிறது.

எனது கணவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்தித்து வருகின்றனர். அனைத்து தரப்பினரின் மதிப்பை காக்கும் வகையில் தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.
தேவைப்படும் பட்சத்தில் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர் மனுதாரராக சேர்ப்பேன். இந்த உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை என் கணவர் விஜய் நிறுத்திவிட்டடார்.
கணவரிடம் இருந்து நெருக்கடி ஏற்பட்டால் நடிகைக்கும், எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன், தேவைப்பட்டால் நடிகையின் பெயரை குறிப்பிடுவேன் என்றும் அந்த மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

