தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா பல்லாவரத்து பொண்ணு என்பது அனைவரும் அறிந்த விஷயமே. முன்னதாக, மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்த இவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனால், போகப்போக சரியாக பிக்கப் செய்துகொண்டு அவர் ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
விஜய், சூர்யா, தனுஷ், என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாகவே அவரது மார்க்கெட் சரசரவென்று உச்சத்தில் சென்றது. கிளாமர், ஹோம்லி என்று எதுவாக இருந்தாலும் அது அவருக்கு பர்பெக்ட்டாக செட் ஆனது.

இவர் தமிழிலை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தார். அந்த நேரத்தில், உடல்நல பாதிப்புகள் காரணமாக சினிமாவில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொண்டார்.
ஆனால், போட்டோ ஷூட்கள் தனியார் நிகழ்ச்சிகள், சொந்த தொழில் போன்றவற்றை கவனித்து வந்தார். தற்போது உடல்நிலை சரியாகி உள்ள நிலையில், மீண்டும் ஆக்டிவாக படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

அது மட்டும் இல்லாமல் சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை கடந்த வருடம் கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம்.
தற்போது இரண்டு பேரும் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா தன்னுடைய முதல் திருமண உறவு முறிந்த பின்பு இருந்த மனநிலை குறித்தும் ராஜ் நிடிமோரு குறித்தும் பேசிய அவர் முதல் திருமண முடிவுக்கு பிறகு நான் முழுமையாக உடைந்து போனேன்.

மீண்டும் யாரையும் நம்பவோ, காதலிக்கவோ அவர்களை சார்ந்திருக்கவும் கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் இதுபோன்ற நிபந்தனைகள் ஏதுமின்றி திறந்த மனதுடன் வாழ்வதற்கு என்னை நானே அனுமதித்தபோது ராஜ் நிடிமோருவின் அன்பை புரிந்து கொண்டேன்.
தற்போது, சிறந்தவளாக மாறி இருக்கிறேன். வேலை, பயணம், உடற்பயிற்சி என அனைத்திலும் நாங்ள் சேர்ந்து இருக்கிறோம். ஒரு நாள் கூட அவரை விட்டு பிரிந்திருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சமந்தா அதில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

