காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வர தவெக அழைத்து வருவதாக சமீபத்தில் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
இது குறித்து விளக்கமளித்த காங்., எம்பி விஜய் வசந்த், தவெக – காங்., கூட்டணி என கிரிஷ் சோடங்கர் பேசியது அவரது சொந்த கருத்து, எதுவாக இருந்தாலும் கட்சி தலைமையே முடிவு எடுப்பர் என விஜய் வசந்தி தெரிவித்திருந்தார். இவரது கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் விஜய் வசந்த் எம்பி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான ஒரு போராளியாக, எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடாங்கர் அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் ஊடகங்களுக்கு கூறிய சமீபத்திய என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதை விளக்கிக் கூற விரும்புகிறேன்.

நான் கூற நினைத்தது இதுவே: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான அவர், கூட்டணி குறித்து தெரிவித்த கருத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும், கட்சியின் உயர்மட்ட தலைமைக்கான நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

