ஆண் பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது எல்லோரும் அறிந்ததுதான். இந்த படத்திற்கு கதை எழுதிய சிவக்குமார் முருகேசன், இயக்கியுள்ள படம் தான் தாய் கிழவி.
சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த இந்த படத்தின் டிரெய்லர், முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராதிகாவின் மிரட்டலான நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ப்ரீமியர் ஷோ பார்த்த பிரபலங்கள் படத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ராதிகா, இயக்குநர் சிவக்குமாரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஷாலினி, ஜோதிகா, சூர்யா போன்ற பிரபலங்கள் நேற்று படத்தை பார்த்திருந்தனர்.
திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. பெண்மையின் வலிமையை அழகாக சித்தரித்துள்ள இப்படம் மனதை நெகிழச் செய்யும் விதமாக மட்டுமல்லாது, சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் சினிமாவாகவும் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் குறித்து பாராட்டிய ஜோதிகா, இது உண்மையில் அவரின் முதல் படைப்பா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். சமூகத்திற்கு தேவையான முக்கியமான செய்தியை மரியாதையான நகைச்சுவையுடன் இயல்பாக சொல்லிய விதம் பாராட்டத்தக்கது என்றும், ஒரு பெண்ணாக இப்படத்தை பார்த்தபோது பெருமை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரின் சிந்தனையே அவரது குணநலனைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடிகை ராதிகா சரத்குமார் போன்ற வலுவான ஆளுமை கொண்ட கலைஞருக்கு தகுந்த இடத்தை வழங்கிய தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். வயது என்ற வரம்பை தாண்டி ஒரு பெண்ணின் திறமையை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது அனைத்து நடிகைகளின் சார்பிலும் பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார். தனது நட்சத்திர மதிப்பை பயன்படுத்தி பெண்கள் மையப்படுத்திய படைப்பை உருவாக்கியதற்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் குறித்து ஜோதிகா மேலும் கூறியதாவது: இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த உடல் உழைப்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. “தாய் கிழவி” என்பது சக்திவாய்ந்ததும் புத்திசாலித்தனமானதுமான ஒரு பாத்திரம் மட்டுமல்ல, அதே சமயம் மனதை கவரும் விதமாகவும் அமைந்துள்ளது. உடல் மொழி, குரல் மாறுபாடு, வசன உச்சரிப்பு, சிரிப்பு என அனைத்திலும் ராதிகா தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.
இப்படம் பெண்களை மையமாகக் கொண்டதோடு மட்டுமல்லாது, தமிழ் சினிமாவை ஒரு படி முன்னேற்றும் படைப்பாகவும் திகழ்கிறது. “தாய் கிழவி” படக்குழு பெருமைப்படத் தகுதியானவர்கள் என ஜோதிகா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

