திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் இன்று இனிதே நடந்தது.
இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி டேட்டிங்கிக்காக வெளிநாடு சென்றனர்.
என்னதான் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவினாலும், இருவர் தரப்பில் எந்த பதிலும் இல்லாததால் ஒரு வேளை இது வதந்திதான் என ஊடகமே நம்பும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றும், திருமண பத்திரிகை சோஷியல் மீடியாவில் பரவியது.
ஆனால் இதற்கும் சரியான பதில் இல்லை, இருப்பினும் இது உண்மை என்று பின்னர் தான் தெரிந்தது.
இருவரது திருமணம் பிப்.,26ஆம் தேதி உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக முன்னரே இருதரப்பு குடும்பமும், ராஜஸ்தான் சென்றது. அங்கு உற்சாகமான கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மெகந்தி விழா களைகட்டியது. விஜய் மற்றும் ராஷ்மிகா தாயார் இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து இன்று காலை 10.15 மணிக்கு ராஷ்மிகா கழுத்தில் தாலி கட்டினார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வரும் மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அதில் அத்தனை சினி உலகமும் பங்கேற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக கொடவா மரபுப்படி திருமணம் நடைபெற்றது. முதலில் தெலுங்கு முறைப்படி விஜய் தேவரகொண்டா தாலி கட்டினார். பின்னர் மாலை ராஷ்மிகா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் கொடவா மரபுப்படி நடந்தது.

