பொதுவாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு எப்படி பெரிய மவுசு இருக்கிறதோ அதேபோன்று சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அப்படி தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஃபாரினா.
தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்த ஃபாரினா பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்தார். ஆனால் ஃபாரினாவை நடிகையாக மக்கள் மனதில் கொண்டு போய் சேர்த்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் சொல்லப்போனால் பலரும் அந்த சீரியலை பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகவே இருந்தார். இவரது வில்லத்தனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இப்படி ஃபரீனா நடிப்பாரா என்ற அளவிற்கு அந்த சீரியலில் உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தினர். தற்போது, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அண்மையில் நடைபெற்ற “ராஜா ராப்சடி 2.0” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் ஒரே மேடையில் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

