பொள்ளாச்சியில் 9 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். கோவையிலிருந்து பழனி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது.
பொள்ளாச்சி நகரம் இங்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி நகரின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சி டி சி டிப்போ அருகில் 3.3/4 ஏக்கர் பரப்பளவில் 9 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 64 கடைகள் , ATM அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை , தாய்மார்கள் பாலூட்டும் அறை, காவல் நிலையம், சிசிடிவி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதனை நாளை (22ம் தேதி) தமிழ்நாடு துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து காந்தி சிலை அருகில் உள்ள நியூ ஸ்கீம் சாலையை அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் சாலை எனவும் , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு உண்டான பணிகளை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நகர மன்ற தலைவர் சியாமளா ஆகியோர் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வில் நகர செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன் அமுதபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

