கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில், கல்லூரிச் செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ‘இம்பாக்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவர் முரளி மேனன் மற்றும் கௌரவ விருந்தினராக கோவை மறைமாவட்ட பிஷப் பிரின்ஸ் கால்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்டி. படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 750 மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர் பால் சுதன், நிர்வாகக் குழுவினர், முக்கியப் பிரமுகர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

