வெயில் காலம் ஆரம்பித்த நிலையில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக குடிப்பதோடு, மட்டுமல்லாமல் நீர்ச்சத்துள்ள பழங்களுடன் நீர்மோர், இளநீர் போன்றவற்றையும் அருந்தலாம்.
அதுமட்டுமின்றி உடல் சூட்டை குறைக்க உதவும் சில சிறந்த தானியங்களும் இருக்கின்றன. அதில், கம்பு முக்கியமான ஒன்றாகும். கம்பு கொண்டு கூழ் தயாரித்து கோடைகாலத்தில் குடித்து வரும்போது உடல் சூடு குறைவதோடு உடலில் வலிமையும் ஆற்றலும் அதிகரிக்கிறது.
உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!
கம்பு கூழ் செய்வது மிகவும் சுலபம். அதுவும் இதை முந்தைய நாள் இரவு செய்து வைத்தால் மறுநாள் காலையில் குடிக்க ஏற்றதாக இருக்கும். எனவே, உங்களுக்கு உள்ள நேரத்தை பொறுத்து இந்த கம்மங்கூழ் கொண்டு தயாரித்து காலை உணவின் போது குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கம்பு
- 3 1/2 கப் தண்ணீர்
- 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு
- 300 மிலி மோர்
- 15 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
செய்முறை
Step 1: முதலில் கம்பை இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். நீரை முற்றிலுமாக வடிகட்டிய பின்னர், ஒரு துணியில் கழுவிய கம்பை போட்டு பரப்பி ஒரு மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
Step 2: அதன் பின்னர், ஈரப்பதம் காய்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் காயவைத்த கம்பை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து அத்துடன் அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
Step 3: நீர் நன்கு கொதித்த பின் அதில் அரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து நன்கு கிளறி விடவும். தொடர்ந்து, 15 நிமிடங்கள் கைவிடாமல் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். இல்லையென்றால் கெட்டிப்பட்டு விடும். கம்பு நன்றாக வெந்து சற்று கெட்டியானதும் அதை இறக்கி முழுமையாக குளிர வைக்க வேண்டும்.
Step 4: கம்பு நன்றாக குனிந்த பின் அதில் 250 மில்லி நீரை ஊற்றி மூடி வைத்து 8 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் எட்டு மணி நேரம் கழித்து நன்கு கட்டிகள் இன்றி கிளறி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கிளற வேண்டும். அடுத்து அதில், 300 மில்லி லிட்டர் மோரை ஊற்றி கலந்து விட வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கலந்தால் சுவையான கம்மங்கூழ் ரெடி.

