சம்மர் சீசன் தொடங்கியதும் நிறைய பேர் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை முகத்தில் எண்ணை அதிகமாக வழிவதுதான். சுற்றுச்சூழல் மற்றும் அதிகப்படியான வெப்பம் காரணமாக அதிகமாக வேர்ப்பதால், ஏராளமானவர்கள் முகப்பரு பிரச்சனையால், அவதிப்பட்டு வருகின்றனர்.

பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!
இதனை தவிர்க்க சிறந்த பொருட்கள் இருக்கின்றன. அதுவும், கெமிக்கல் கலக்காமல் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து சூப்பரான கிளசரிங் செய்யலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்

சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!
- ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 டேபிள் ஸ்பூன் தேன்
இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி, இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பத்து நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்

- ஆப்பிள் சீடர் வினிகர்
- தண்ணீர்
இரண்டையும், சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதை தண்ணீரில் நனைத்து முகத்தில் மேல் நோக்கியவாறு தடவ வேண்டும். பின் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் துடைத்து எடுக்க வேண்டும். பிறகு சருமத்தை உலர்த்தி பின் மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள்

- அரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- கால் டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மாவு
- கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்
அனைத்தையும் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த கலவையை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இந்த கலவையை கொண்டு சருமத்தை சுத்தம் செய்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
ரோஸ் வாட்டர்

உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட நீக்கும் தன்மை ரோஸ் வாட்டருக்கு உள்ளது. எனவே தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு சருமம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும். முக்கியமாக ரோஸ் வாட்டர் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி

இரண்டையும் அரைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த கிளிசரினை தினமும் பயன்படுத்த வேண்டும்.

