தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய காற்றடைத்த பலூனை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே, பறக்கவிட்டார்.
வரி ஏய்ப்பு புகார்?.. 8 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!
பின்னர் உரிமி இசை முழங்க மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தியதை கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து வருவாய்த்துறை பெண் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்கி பொள்ளாச்சி நகர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

