பொதுவாக அனைவருக்கும் வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், ஒருவரின் வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கத்தான் செய்யும்.
அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்களே இங்கு ஏராளம். வேலை, தொழிலில் மட்டும் அல்ல குடும்பத்தினராகவும் அவர்கள் இருப்பார்கள். அவ்வகையில், பகைவராக இருந்தாலும், அவர்களை தூம்சம் செய்ய இறைவனின் கால பைரவர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

கால பைரவர் தன்னிடத்தில் யார் வருவார் என்று எப்போதும் எதிர்நோக்கி காத்துக் காத்துக் கொண்டிருப்பாராம். அவரின் திருவடியை சரணம் அடைந்தவர்களுக்கு காக்கும் கடவுளாக கால பைரவர் இருந்து வருகிறார். பொதுவாக, காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அளிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னால் சிவனின் காலபைரவர் ரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கையாகவே இருந்து வருகிறது.
பொதுவாக, சிவபெருமானின் 64 வடிவங்களில் காலபைரவர் வடிவம் முக்கியமானதாக கருதப்படுகிறது. கால பைரவர் எதிரிகளுக்கு அச்சத்தை தருபவர் தன்னை சரனடைந்த பக்தர்களை ஆபத்திலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வாழ்வில் வளம் சேர்க்கக்கூடிய அற்புதமானவர் என்பது பலரும் அறிந்த நிதர்சனமான உண்மை.
படைப்பு தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியவர்களில் உயர்ந்தவர் என்று பிரம்ம தேவர் கர்வம் கொண்டாராம். அப்போது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க சிவபெருமானின் அம்சமாக தோன்றியரே காலபைரவர் என்று புராண கதைகளில் கூறப்படுகிறது. உலகிற்கு உணர்த்திய சிவ ரூபம் காலபைரவர் என்பது சிறப்பு.

காசி நகரின் காவல் தெய்வம் காலபைரவர். காசி யாத்திரை செல்பவர்கள் காலபைரவர் கோவிலுக்கு சென்று வந்தால், யாத்திரை பூர்த்தி ஆகும். சிவன் கோவில்களில் வடக்கில் கால பைரவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். காலபைரவரை வழிபட்டால் வறுமை நிலை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். அஷ்டமி பூஜை மிகவும் விஷேசமானது.
பொதுவாக, தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வழிபாடு செய்வது சிறப்புகளைப் பெற்றுக் கொடுக்கும். மன தைரியத்தை உண்டாக்கும் எதிரி தொல்லை நீங்க நாம் கால பைரவை வழிபட வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் தைரியத்தை கால பைரவர் வழிபாடு கை கொடுக்கும். கர்வத்தை அழித்து கடமையே வாழ்க்கையில் நிரந்தரம் என்பதை உணர்த்துபவர் காலபைரவர்.

காலபைரவர் வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்
வாகனம்
பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு அளிப்பது, குறிப்பாக கருப்பு நிற நாய்களுக்கு உணவிடுவது பைரவரின் அருளைப் பெற்றுத் தரும்.
தேய்பிறை அஷ்டமி
காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்நாளில் அவரை வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.
பரிகாரங்கள்
கடன் தொல்லைகள் நீங்கவும், எதிரிகள் பயம் அகலவும், இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் காலபைரவர் வழிபாடு சிறந்த பலனைத் தரும்.
நைவேத்தியம்
மிளகு வடை மாலை சாற்றுதல் மற்றும் தயிர் சாதம் நிவேதனம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
விளக்கேற்றுதல்
தேங்காய் மூடியில் மிளகு மூட்டை கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது (மிளகு தீபம்) பைரவர் வழிபாட்டில் மிக முக்கியமானது.
வழிபாட்டு பலன்கள்
- பயம் மற்றும் பதற்றம் நீங்குதல்.
- நேர மேலாண்மை மற்றும் காரிய சித்தி உண்டாகுதல்.
- ராகு – கேது தோஷங்கள் விலகுதல்.

