வரும் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்து விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு தனது பிரச்சார வாகனத்தை பயணத்தை தொடங்கினார். திருப்பத்தூர் அருகே எஸ் எஸ் கோட்டை பகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பறக்கும் படையினரின் சோதனைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், பணம் பரிசு பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லாததால் அவரது வாகனத்தை அங்கிருந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

