தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஒருவர் மிஸ் ஆகிவிட்டதால் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. ஒரு வேட்பாளரையே தொலைத்து விட்டு எதற்காக விஜய் கட்சி நடத்துகிறார் என்றும் கிண்டல்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.
பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..
அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது பரப்புரையை விஜய் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது வழக்கமான விஷயங்களை பேசிய அவர் சங்கீதா விவகாரம் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, அவர் விமான நிலையத்திலிருந்து சென்ற போது அவரது வாகனங்களை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர் அதில், ஐந்து விபத்துக்கள் நடைபெற்றன. அதேபோல், அவரை பார்ப்பதற்காக நேற்று அலைக்கடலென மக்கள் கூட்டம் கூடியது அதை பார்த்து மற்ற கட்சியினர் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அதேபோல், பிரச்சார வேனில் அவர் நின்று கொண்டிருந்தபோது அவரிடம் குளிர்பானங்களை எல்லாம் தொண்டர்களும் ரசிகர்களும் தூக்கி போட்டார்கள். அதை விஜய் லாவகமாக பிடித்துக் கொண்டார். அதேபோல், சிறுவன் ஒருவனையும் தனது தோளில் தூக்கி வைத்தார்.

இந்த நிலையில், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பிரச்சாரவேனில் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் கேம்பா குளிர்பானத்தை தூக்கி வீசினார். அதையும் சரியாக பிடித்தார். இந்த கேம்பா குளிர்பான விளம்பரத்தில் சமீபத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.
Campa catch by Thalapathy 😎😂 pic.twitter.com/bkyHAFbmLv
— Harish N S (@Harish_NS149) April 9, 2026

