பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சியமானவர் தாமரைச்செல்வி. அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு கணவருடன் விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டார்.

பின் சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு பட வாய்ப்புகளும் அதிரடியாக குவிந்து வந்தன. தாமரைச்செல்வி தன்னை ஆதி என்பவர் நல்லவன் போல் நடித்து நகைகளை ஏமாற்றிவிட்டார் என்று சமீபத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் யாரென்றால், சின்ன மருமகள் சீரியலின் புகழ் ஸ்வேதாவின் கணவர் தான். ஆனால், அவரோ அவனின் உண்மை முகம் தெரிந்து நான் பிரிந்து விட்டேன் என்றும் தற்போது விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடி உள்ளேன் என்று ஸ்வேதா பதிவு செய்திருந்தார்.

தற்போது, ஆதி ஏமாற்றிய விஷயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், என்னென்ன நடக்கிறது எனவும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் தாமரை. அதில் ஆதி என்ற நபரால் சீரியல் நடிகை வைஷ்ணவி, டிடிஎஃப் வாசன் போன்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

இந்த நிலையில், தாமரைச்செல்வியை குறித்து பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உதவி இயக்குனருக்கும் தாமரை செல்விக்கும் தகாத உறவு இருந்ததாக கூறி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது பிரச்சனை ஆனதும், நடிகை நகையை ஏமாற்றி விட்டான் என புகாரில் தெரிவித்ததாக அந்த வீடியோவில் பயில்வான் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்க தாமரைச்செல்வி அவரை கடுமையாக திட்டி விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

