சமூக விரோதச் செயல்களால் அச்சத்தில் உறைந்த குடியிருப்புவாசிகளதொழில் நகரமான கோயம்புத்தூரில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கும் செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில், ரவுடி கும்பல் ஒன்று வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, மலுமிச்சம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் தனித் தனி அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி வருகின்றனர்.இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டு, லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் மோதல் சம்பவங்களும் இப்பகுதியில் தலைதூக்கி உள்ளன.இந்தச் சூழலில், நேற்று அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை, ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் ஒருவர் முந்திக் கொண்டு சென்று உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ரவுடி கும்பல் ஆத்திரம் அடைந்து, இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை ஆபாசமாகப் பேசித் தாக்கி உள்ளனர்.
வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!
வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) இந்தக் கொடூரத் தாக்குதல் காட்சிகள் பதிவாகி உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அத்துமீறிச் செயல்படுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த சி.சி.டி.வி ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற சமூக விரோதச் செயல்களால் தாங்கள் நிம்மதியாக வசிக்கும் சூழல் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“உடனடியாகக் காவல்துறையினர் இத்தகைய கும்பலைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்” என்பதே ஒட்டுமொத்தப் பகுதியின் எதிர்பார்ப்பாக உள்ளது. காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அண்ணா அண்ணா எனக் கூறிய ரவுடி கும்பலிடம் ஏன் ? என கேள்வி எழுப்பினர் அதற்கு அவர்களை கலாய்க்கும் விதமாக அந்த ரவுடி கும்பல் காவல்துறை உங்கள் நண்பன் அதனால் தான் அண்ணா என்று கலாய்க்கும் ஆடியோவும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

