பொதுவாக முகத்தின் அழகுக்கு மெருகூட்டுவதும் கவர்ச்சியாக காட்டுவதும் புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகை கொடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், புருவங்களில் உள்ள முடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவது நல்லது. அதோடு, சம அளவு பாதம் எண்ணெயும், ஆளி எண்ணெயையும் கலந்து சிறு துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்துவர புருவங்களில் மாற்றத்தை உணரலாம்.

ஒருவரின் முக அமைப்பு வசீகரமாகவும் பார்ப்போரையும் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்க்க செய்யும் வகையில் இருந்தாலும், முகத்தில் உருவமுடி அடர்த்தி இல்லாமல் இருந்தால், கலை இழந்தே காணப்படும். இந்த ஐந்து எண்ணெய்களை உங்கள் புருவத்தின் மீது தடவ அடர்த்தியான முடி வளர செய்து உங்கள் புருவத்தினை இன்னும் அழகாக மெருகூட்டலாம்.
ஆர்கான் ஆயில்

இந்த ஆர்கான் ஆயில் முடி அடர்த்தியாக வளர்வதற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் இதில் அடங்கி இருப்பதால் விளக்கெண்ணெயுடன் சம அளவு ஆர்கான் ஆயில் கலந்து புருவங்களில் தடவி வர நாளடைவில் புருவமுடி கருமையாகும், அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
ஜோஜோபா ஆயில்

சருமத்தின் அடிப்பகுதியில் இயற்கையில் சுரக்கும் ஒருவகை எண்ணெய் பசை போன்ற திரவத்திற்கு சமமானது. இந்த ஆயிலை விளக்கெண்ணுடன் கலந்து அடர்த்தி இல்லாத புருவங்கள் மீது தடவி வந்தால், முடியின் வேர்க்கால்களுக்கு அருகில் உள்ள நுண்ணறைகளில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தமடைய செய்கிறது.
தேங்காய் எண்ணெய்

கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!
தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் விளக்கெண்ணெயுடன் சேர்ந்து சருமத்தில் உள்ள பகுதிகளுக்கு ஊடுருவி செல்ல வல்லவை. முடி அடர்த்தியாக வளரவும் உதவி புரிகிறது.
ஆலிவ் ஆயில்

சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!
ஆலிவ் ஆயிலில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் முடியின் வேர்க்கால்களுக்கு சிறந்த ஊட்டமளித்து முடி செழித்து வளர உதவி புரிகிறது. ஆலிவ் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து புருவ முடிகள் மீது தொடர்ந்து தடவிவர அது வேர் பகுதிகளை சீராக்கி முடி அடர்த்தியாகவும் அழகாகவும் வளர செய்கிறது.
ஆல்மண்ட் ஆயில்

முடிகள் செழித்து வளர ஆல்மண்ட் ஆயில் உதவி புரிகிறது. ஆல்மண்ட் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்து இதை புருவங்கள் மீது தேய்த்து வரும் போது அது சுலபமாக சருமத்துக்குள் உறிஞ்சப்பட்டு முடி உதிர்வை தடுக்கும். முடி அடர்த்தியாக வளர உதவி புரியும். மேற்கூறிய எண்ணெய்களில் ஒன்றை விளக்கெண்ணெயுடன் கலந்து தொடர்ச்சியாக புருவத்தில் செய்து பாருங்கள். பலன் அற்புதமாக இருக்கும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

