ஒவ்வொரு கிராமத்திற்கும் தமிழகத்தில் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது தான் காவல் தெய்வ வழிபாடு. ஊர் எல்லையிலும், ஏரிக்கரையிலும், ஆலமரத்தடியிலும் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்தக் காவல் தெய்வங்கள், வெறும் சிலைகள் மட்டுமல்ல; அவை அந்த மண்ணின் மக்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் சின்னங்கள் ஆகும்.

மொத்தம் 18 ஆண்டு காவல் தெய்வங்களும் 18 காவல் பெண் தெய்வங்களும் இருக்கின்றன. காவல் தெய்வங்கள் என்பவர்கள் நம் முன்னோர்கள். ஊர் மக்களுக்காகத் தங்களைத் தியாகம் செய்தவர்கள். அதனால்தான், இன்றும் இவர்களுக்குப் படைக்கப்படும் உணவுகள் (சுருட்டு, சாராயம் அல்லது அசைவ உணவுகள்) அந்தந்தப் பகுதிகளில் மக்கள் என்ன உண்கிறார்களோ, அதையே தெய்வத்திற்கும் படைக்கும் ஒரு நெருக்கமான உறவுமுறை நிலவுகிறது.
ஆண் காவல் தெய்வங்கள்
- அய்யனார்
- மதுரை வீரன்
- காத்தவராயன்
- ஒண்டிக்கருப்பன்
- கருப்பண்ணசாமி
- வீரனார்
- சங்கிலி கருப்பன்
- ஆகாய கருப்பன்
- ஆத்தாடி கருப்பன்
- நொண்டிக் கருப்பன்
- மாறநாட்டு கருப்பன்
- முன்னடிக் கருப்பன்
- தமிழ் கருப்பன்
- பெரிய கருப்பன்
- சின்ன கருப்பன்
பெண் காவல் தெய்வங்கள்
- வீரமாகாளி
- குலுமாயி அம்மன்
- மாகாளி
- எல்லைப்பிடாரி
- பெரியாச்சி
- எல்லை மாரி
- பேச்சியம்மன்
- பூவாடைக்காரி
- செல்லியம்மன்
- கன்னிமார்
- சீலைக்காரி
- பச்சையம்மன்
- துலக்கானத்தம்மன்
- வனதுர்க்கை
- செல்லாயி அம்மன்
- காட்டேரி அம்மன்
- அம்முச்சியார்
- மாசாணியம்மன்

உயிர்பெறும் கல் நந்தி?.. பாவங்களை போக்கும் ‘யாகந்தி’ கோயிலில் நடக்கும் அதிசயம்..!
யார் இந்தக் காவல் தெய்வங்கள்?
முன்னோர்கள் தங்கள் மண்ணை காக்க, மக்களின் மானத்தைக் காக்க போரிட்டு உயிரைத் கொடுத்தவர்களையே பிற்காலத்தில் தெய்வங்களாக வழிபட்டனர். இதை ‘நடுகல் வழிபாடு’ என்றும் கூறுவர்.
தனித்துவமான அடையாளங்கள்
காவல் தெய்வங்களின் கோவில்கள் மற்ற ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் இருந்து மாறுபட்டவையாகவே இருக்கின்றன.
ஆயுதங்கள்
- பெரிய அரிவாள், ஈட்டி, கத்தி போன்றவை இத்தெய்வங்களின் கைகளில் இருக்கும். இது தீய சக்திகளை விரட்டுவதைக் குறிக்கிறது.

சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!
வாகனங்கள்
- இத்தெய்வங்களுக்கு வாகனமாக குதிரை, யானை மற்றும் வேட்டை நாய்கள் பெரும்பாலும் சிமெண்ட் அல்லது மண்ணால் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருக்கும்.
திறந்தவெளி வழிபாடு
- பெரும்பாலான காவல் தெய்வங்கள் கூரையில்லாத திறந்தவெளியிலேயே அமைந்திருப்பார்கள். இயற்கைக்கும் மனிதனுக்கும் நெருக்கமானவர்கள் என்பதை இது உணர்த்துகிறது.
வழிபாட்டு முறைகள்
- கிராமத்துத் திருவிழாக்களில் (கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல்) காவல் தெய்வங்களுக்குத் தான் முதல் மரியாதை அளிக்கப்படும்.
- குறிப்பாக, நள்ளிரவில் செய்யப்படும் பூஜைகளும், ‘வேட்டைக்குச் செல்லுதல்’ என்ற ஐதீகமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
- இன்றும் பல ஊர்களில் ஊர் எல்லையைத் தாண்டி எந்தத் தீய சக்தியும் வராமல் இந்தக் காவல் தெய்வங்கள் தான் பாதுகாப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

சமூக முக்கியத்துவம்
- காவல் தெய்வங்கள் சாதி, மத பேதமின்றி அந்தந்த ஊர் மக்கள் அனைவரும் இணைந்து வணங்கும் பொதுத் தெய்வங்களாக விளங்குகின்றன.
- இவை தமிழர்களின் வீரத்தையும், நன்றியுணர்வையும் பறைசாற்றும் கலாச்சாரப் பெட்டகங்கள்.
நவீன யுகத்தில் நாம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டாலும், நம் வேர்களையும் பாரம்பரியத்தையும் நினைவூட்டும் இந்தக் காவல் தெய்வங்கள், இன்றும் நம் கிராமிய வாழ்வியலின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன.

